நாளை முதல் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டம் தொடக்கம்...முதலில் எந்த இடத்தில் தெரியுமா?

பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டம் முதற்கட்டமாக நாளை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

நாளை முதல் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டம் தொடக்கம்...முதலில் எந்த இடத்தில் தெரியுமா?

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக,  தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், நாளை முதற்கட்டமாக சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை விரிவாக்கும் விதமாக தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை  பெறும் திட்டம் நாளை தொடக்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். விரைவில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.