வேலை கிடைக்காத விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட பெண்!!

ஆவடி அருகே, வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மகளுக்கு 21 வயதாகிறது. இவர் செம்மஞ்சேரியில் உள்ள  சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பு படித்து கடந்த ஆண்டு முடித்துள்ளார்.

இதன் பின்னர் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகம் சென்று வந்துள்ளார். ஆனால் எதிலும் தேர்வாகமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று  ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு சென்ற அவர், இதிலும் தேர்வாகாமல் வீடு திரும்பியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா  தாய் சுபாவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் திருமுல்லைவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுவேதா பள்ளி அளவில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தங்கை  நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லை என மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.