சட்டம் தெரியாதவர் சபாநாகர்...அதிமுகவின் இன்பதுரை சொல்கிறார்!

தமிழ்நாடு அரசு மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை ஷாக் மாடல் அரசு.  

சட்டம் தெரியாதவர் சபாநாகர்...அதிமுகவின் இன்பதுரை சொல்கிறார்!

சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாப்பவராக இருந்தால் வேலுமணி மீதான வழக்கு முடியும் வரை சபாநாயகர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் இன்பதுரை கூறியுள்ளார்.

நெல்லையில் அதிமுக போராட்டம்

தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அதிமுக வழக்குரைஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். உட்கட்சி பிரச்சினை பற்றி பேசும் அளவுக்கு நான் அதிமுகவில் பெரிய தலைவர் இல்லை.

இது திராவிட மாடல் அரசு அல்ல

ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழ்நாடு அரசு மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை ஷாக் மாடல் அரசு.    மின்சாரத்தை கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன். அந்த தாமஸ் ஆல்வா எடிசன் புறண்டு படுக்கிற அளவுக்கு அரசு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் நோக்கம் எந்த மதத்தினரையும் புண்படுத்தினால் அது தவறு. எல்லா நீதிமன்றத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்வு பெற்றுள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கிறோம் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.  

சபாநாயகர் பதவி விலக வேண்டும்

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு குறித்து கேள்வி எழுப்பியபோது, சட்டம் தெரியாதவர் சபாநாகர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கூட ஒரு புகார் கொடுத்துள்ளார் சபாநாயகர் பதவி என்பநு மாண்புமிக்கது அவர் குற்றம் சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் சபாநாயகர் கொடுத்தது பொய் புகார் என்று தெரிந்து தான் அன்றைக்கு நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றார்.

ஒருவேளை சட்டமன்றத்தின் மாண்பை காக்க அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தால்  இன்றைக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். திரும்பப் பெறவில்லை என்றால் சட்டமன்ற மாண்பை பாதுகாக்க என்றால் வழக்கு முடியும் வரை சபாநாயகர் பதவி விலக வேண்டும். எதிர்கட்சி கொறடாவாக இருக்க கூடிய வேலுமணிக்கு அந்த வாய்ப்பை இனி சபாநாயகர் வழங்குவாரா என்ற சந்தேகம் எழுகிறது. நாங்கள் வழக்கை நடத்த தயாராக இருக்கிறோம். வழக்கு கொடுத்தவர் என்ற முறையில் சபாநாயகர் நீதிமன்றம் வரவேண்டும். அப்போது நாங்கள் கேள்வி எழுப்புவோம். எனவே வழக்கு முடியும் வரை அவர் பதவி விலகி இருக்க வேண்டும்.

நெல்லலை எம்பியின் மகனை மணல் கடத்தல் வழக்கில் தேடுகறார்கள் நெல்லையில் திமுக இரண்டு அணிகளில் ஒரு அணியினர் கொடுத்த புகாரில் தான் எம்பி மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி அதிமுகவை அழிக்க வேண்டுமென்றார் இன்று அவர் இல்லை அதிமுக ஆலமரம் இது காகிதப்பூ அல்ல காகிதப் பூ ஆலமரத்தை பற்றி பேச அருகதை இல்லை என்று தெரிவித்தார்