"அரசுப்பள்ளி மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது" அண்ணாமலை கண்டனம்!!

"அரசுப்பள்ளி மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது" அண்ணாமலை கண்டனம்!!

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, முறையாக புத்தகப்பை மற்றும் காலணிகள் போன்ற பொருட்களை வழங்காமல், அரசு காலம் தாழ்த்தி வருவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் புத்தகப் பை, காலணிகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள் மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்காமல், தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க || தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து...பெற்றோர் முற்றுகை!!