"திமுக குடும்ப சொத்து; 50 ஏழை நாடுகளின் கடனை அடைக்க முடியும்" அண்ணாமலை பேச்சு!!

"திமுக குடும்ப சொத்து; 50 ஏழை நாடுகளின் கடனை அடைக்க முடியும்" அண்ணாமலை பேச்சு!!

திமுகவின் குடும்ப சொத்துகளை விற்றால் 50 ஏழை நாடுகளின் கடன்களை அடைத்து விட முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், வ.உ.சி. சாலை, கீழசண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பொது மக்களை சந்தித்துள்ளார்.

பின்னர், கன்னி விநாயகர் கோயில் அருகே பயணத்தை நிறைவு செய்த அண்ணாமலை, திறந்த வேனில் இருந்தவாறு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர்,  மக்களை குடிக்க வைத்து அதன் மூலம் திமுக அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு ஊழல் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், நாட்டிலேயே அதிக அளவில் கடன் வாங்கியதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது 7லட்சத்து53 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகம் கடன் வாங்கி உள்ளது.  திமுகவினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருவதால்   திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் எந்த தனியார் தொழில் நிறுவனங்களும் தொழில் தொடங்க வரவில்லை. குறிப்பாக தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது இல்லாத நிலையிலே உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் குடும்ப சொத்துகளை விற்றால் 50 ஏழை நாடுகளின் கடன்களை அடைத்து விட முடியும் எனவும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க || திருப்பதி மலைப் பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தடை!!