திமுகவுக்கு மன உறுதி இல்லை!! கிஷோர் கே சாமிக்காக கொந்தளிக்கும் அண்ணாமலை 

பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் #KishoreKswamy என அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார்.

திமுகவுக்கு மன உறுதி இல்லை!! கிஷோர் கே சாமிக்காக கொந்தளிக்கும் அண்ணாமலை 
முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டதை அடுத்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் என கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர். தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி மீது ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  திமுக குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் #KishoreKswamy என ட்வீட் போட்டுள்ளார்.