அர்ஜூன் சம்பத்தை உடனே கைதுசெய்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திருவள்ளுவரை தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கருக்கும் மதச்சாயம் பூசி அரசியல் செய்வதை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்.

அர்ஜூன் சம்பத்தை உடனே கைதுசெய்

புரட்சியாளர்  அம்பேத்கர் நினைவுநாள் 

அம்பேத்கர் நினைவுநாள் டிசம்பர் 6 அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவுநாளில் உலகளவில் தலைவர்களும் வாழ்த்துக்களையும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகின்றனர். 

அம்பேத்கரை அவமதிக்கும் இந்துமக்கள் கட்சி :::

அம்பேத்கர் நினைவுநாளில் பல இடங்களில் நினைவுதினத்தை அனுசரிக்கும் விதமாக போஸ்டர்களும் ஒட்டப்படுவது வழக்கம் . அதில் இந்துமக்கள் கட்சியினர் சார்பில் காவி நாயகனே எனவும் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்தும், நெற்றியில் திருநீர் அணிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுடிருந்தன. 

விசிகவினர் கடும் எதிர்ப்பு  இவ்வாறு செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பும் தெரிவித்தும் இரண்டு டிசம்பர் 12   சென்னை வள்ளுவர்கோட்டத்திலும் மாவட்டங்கள் தோறும் அர்ஜூன் சம்பத் கண்டித்தும் போராட்டம் நடந்தினர். இந்த போராட்டத்தின் போது அம்பேத்கரின் கொள்கைகள் குறித்தும் உயர்நீதிமன்றத்தை அவமதித்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்யகோரியும் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க : எங்களுக்கு மகாராஷ்டிரா வேண்டாம்...தெலுங்கானா தான் வேணும்...மக்கள் கூற காரணம் என்ன?

புதுச்சேரி விசிகவினர் போராட்டம்

இதனை தொடர்ந்து திருவள்ளுவர், தந்தை பெரியாரை தொடர்ந்து அம்பேத்காரை அவமதித்த இந்துமக்கள் கட்சியை கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை அருகே புதுச்சேரி மாநில விசிக முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சினர் பங்கேற்று இந்து மக்கள் கட்சி மற்றும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.அம்பேத்காருக்கு மதசாயத்தை பூசிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் மீது தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் மீது புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.