சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு…இந்திய அஞ்சல் துறை நடத்தியது!

இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டது.

சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு…இந்திய அஞ்சல் துறை நடத்தியது!

நாமக்கல் தலைமை அஞ்சலகத்தின் சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சேமிப்புத் திட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட வரும் பெண்கள் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் தலைமை அஞ்சலகத்தின் சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதியில் வழியாக  பேரணி நடைபெற்றது.

துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது

இந்த பேரணியின் போது செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் யார் யாரெல்லாம் சேர்ந்து பயன் பெறலாம், திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் பயன்கள், முதிர்வு காலம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்த பேரணியில்  அஞ்சலக ஊழியர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.