நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின்- குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சி

நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் ; தந்தையைப் போலவே மகனும் சிறப்பாக செயல்படுகிறார் என்று  இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின்- குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சி

நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் ; தந்தையைப் போலவே மகனும் சிறப்பாக செயல்படுகிறார் என்று  இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது உடன் கனிமொழி மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் உடன் இருந்தனர். சந்திப்புக்குப் பிறகு முதலமைச்சர் இல்லம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தேன். தனிப்பட்ட முறையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது . குறிப்பாக ஸ்டாலின் முதல்வரான பிறகு இப்போது தான் முதன் முறையாக சந்திக்கிறேன் என்று தெரிவித்தார். 

நம் நாட்டின் சிறந்த முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் ,அவர் செயல்படும் முதல்வராகவும் இருந்து வருகிறார் .அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் தந்தையை போல மகனும் சிறப்பாக செயல்படுகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.