துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் ஆய்வு...!! 

துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் ஆய்வு...!! 

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அஜய் பட் ஆய்வு செய்தார்.

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான துப்பாக்கிகள் மற்றும் படைக்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துப்பாக்கி தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சௌத்ரி மற்றும்  துப்பாக்கி தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஷ் குமார் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை மூத்த அதிகாரிகள் அஜய் பட்டிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அஜய் பட்டிடம்  துப்பாக்கி தொழிற்சாலையின் தயாரிப்பு விவரம், வணிக விவரம், ஆர்டர் புத்தக நிலை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குறித்த முயற்சிகள் பற்றி அஜய் பட்டிற்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

மேலும்  அஜய் பட் உற்பத்தி நிலையங்களுக்குச் சென்று பல்வேறு வகையான ஆயுதங்களின் உற்பத்தியைப் பார்வையிட்டார். அப்போது  திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள் (டிஏஆர்) துப்பாக்கியை  சோதித்து பார்த்தார்.

மேலும், துப்பாக்கி தொழிற்சாலை செய்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களைப் பாராட்டிய தோடு தான் அலுவலகம் வந்ததின் நினைவாக தொழிற்சாலை வளாகத்திற்குள் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.