இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

சென்னை நந்தம்பாக்கத்தில் பழமையான மரம் சாய்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று காற்றுடன் கனமழை பெய்தது இதில் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் உள்ள பழமையான மரம் ஒன்று திடிரென இன்று சாய்ந்தது, அதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்  வந்த தி. நகரை சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்