தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்கள் கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 புள்ளி 34 லட்சம் சிறார்கள் கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்கள் கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்...

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பாதிப்புக்கு இடையே ஒமிக்ரானும் அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன்படி சிறார்களின் வசதிக்கென பள்ளிகளில் தனிமுகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 2 புள்ளி 34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22 ஆயிரத்து 334 சிறார்கள் முதன் நாளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர்.