கொரோனா பாதிப்பு.... சென்னை முதலிடம்!!

கொரோனா பாதிப்பு.... சென்னை முதலிடம்!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் 421 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர் எனவும் அதிகபட்சமாக சென்னையில் 91 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஒருவர் உள்பட மொத்தம் 35 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அதனோடு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 463 ஆக உள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  சேலம் மருத்துவமனையில் காலாவதியான உணவுகள்... ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்!!