திமுக எங்கள் உயிர்,.அன்பு தளபதி ஸ்டாலினுக்காக உயிரை கொடுப்போம்.! நடுரோட்டில் ரகளை செய்த குடிமகன்.! 

திமுக எங்கள் உயிர்,.அன்பு தளபதி ஸ்டாலினுக்காக உயிரை கொடுப்போம்.! நடுரோட்டில் ரகளை செய்த குடிமகன்.! 

தஞ்சையில் குடிபோதையில் நாடு ரோட்டில் படுத்து ரகளை செய்த நபரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சை மாவட்டம் சின்னயாபாளையம் பகுதியை சேர்ந்தவர் போஸ். மது போதை தலைக்கேறி தள்ளாடிய அவர், எம்.கே.மூப்பனார் சாலையில் படுத்துக் கொண்டு ரகளை செய்தார். அங்கு அவர்களை வீடியோ எடுத்த நபர்களிடம் திமுக எங்கள் உயிர். அன்பு தளபதி ஸ்டாலினுக்காக உயிரை கொடுப்போம், அன்பு தளபதி எங்கள் தளபதி என்று கூறியபடி ரகளை செய்தார். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் போஸை வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தினர்.