தாயகம் திரும்பிய தங்கமகன் மாரியப்பனுக்கு டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு!

டோக்கியோ  பாரலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். 

தாயகம் திரும்பிய தங்கமகன் மாரியப்பனுக்கு  டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு!

டோக்கியோ  பாரலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். 

டோக்கியோ பாரலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் பூங்கொத்து அளித்தும், பொன்னாடை போர்த்தியும் மாரியப்பனை வரவேற்றனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியாதது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். எனினும்  அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என நம்பிக்கை  தெரிவித்தார்..