கல்குவாரிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

கல்குவாரிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு முதல் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு ராசா கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் விவசாயி ஆன இவர் தனது நிலத்திற்கு அருகே சட்டவிரோதமாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை மூடக்கோரி காவல்துறையினர் வருவாய்த் துறையினரை வலியுறுத்தி இன்று 12 வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏழு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.