47 வயதில் நீட் தேர்வு எழுதி அசத்திய தந்தை... மகளுக்கு நீட் பயிற்சி அளிக்க முன்னோட்டம்...

சென்னையில், 47 வயதானவர் நீட் தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.

47 வயதில் நீட் தேர்வு எழுதி அசத்திய தந்தை... மகளுக்கு நீட் பயிற்சி அளிக்க முன்னோட்டம்...

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், சென்னை வடபழனியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர், நீட் தேர்வு எழுதினார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு படித்து முடித்த இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் ‘நீட் தேர்வை எழுதினார்.

நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை என்பதால், இந்த தேர்வை எழுதியதாக கூறினார். இதன்மூலம் தனது மகள் நீட் தேர்வு எழுத தன்னால் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க முடியும் என கூறும் அவர் தான் தேர்வு அறைக்குள் நுழைந்தபோது மற்ற மாணவர்கள் தன்னை வித்தியாசமாக பார்த்ததாகவும், எனினும் தான் தேர்வில் கவனம் செலுத்தியதாகவும் கூறுகிறார்.