தீக்குச்சி தொழிற்சாலையில் தீ விபத்து!

தீக்குச்சி தொழிற்சாலையில் தீ விபத்து!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி குச்சி தயார் செய்யும் கம்பெனியில் மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஏழாயிரம்பண்ணை சாலையில் அமைந்துள்ள சித்திரம்பட்டி கிராமத்தில், பழைய அப்பனேரியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மருதி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில், தீக்குச்சி தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்திவருகிறார்.

திடிரென்று மின் கசிவின் காரணமாக தீக்குச்சி மூட்டையில் தீப்பிடித்துள்ளது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த கோவில்பட்டி வண்ணா ஊரணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் (75) என்பவர்  தீயில் சிக்கி உயிரிழந்துள்ளர். 

மேலும், சித்திரம் பட்டியை சேர்ந்த கனகலட்சுமி படுகாயம் அடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தொடர்ந்து இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் இவ்விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள குச்சி தயார் செய்யும் இயந்திரம் மரம் அறுக்கும் இயந்திரம் உட்பட ஏராளமான குச்சி மூட்டைகளும் எரிந்து நாசமாகியுள்ளது.

இதையும் படிக்க: அலட்சியமாக உறங்கிய செவிலியர்கள்...மருத்துவ உதவி கிட்டாமல் உயிரிழந்த குழந்தை!!