பசித்தவர்களுக்கு 3 வேளையும் உணவு... அம்மா உணகத்தில் இலவசம்!!

பசித்தவர்களுக்கு  3 வேளையும்  உணவு... அம்மா உணகத்தில் இலவசம்!!

தமிழகம் முழுவதும் மூன்று வேளையும் அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்படும் என்பதால், ஏழை எளிய  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்காலக்கட்டத்தில் உணவின்றி அல்லல் படும் மக்கள் பயன்பெறும் விதமாக, தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் இன்று முதல் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.  

அதன்படி, கோவை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் ஏழை, எளிய மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திறக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், தயிர்சாதம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் ஏழை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.