கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்ற அரசு மருத்துவர்  

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த மருத்துவர் ஜோதிமணியை  கூடலூருக்கு மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்ற அரசு மருத்துவர்   

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த மருத்துவர் ஜோதிமணியை  கூடலூருக்கு மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்கை அளின்ன அரசு மருத்துவர் மறுத்த நிலையில் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில அந்த தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஜோதிமணி  அறுவை சிகிச்சை மேற்கொண்டது  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தற்போது ஜோதிமணி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.