மக்களே! ஹெல்மெட் போடலைன்னா அபராதம் நிச்சயம்!!  

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என திருச்சி மாநகர   துணை காவல் ஆணையர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மக்களே! ஹெல்மெட் போடலைன்னா அபராதம் நிச்சயம்!!   

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என திருச்சி மாநகர   துணை காவல் ஆணையர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரில் உள்ள ரோந்து வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனங்கள் குறித்து மாநகர காவல் ஆணையர் சக்திவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாதவாறு ரோந்து பணியினை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். 

மேலும், காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து செல்வதை அதிகாரிகள் ஆய்வுசெய்து உறுதிபடுத்த வேண்டும் என குறிப்பிட்ட அவர்,  தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கவேண்டும் எனவும் கூறினார்.