அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்த வரும் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் திட்டம்…!?

தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 28 விழுக்காடு உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்த வரும் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் திட்டம்…!?

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மூன்று தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு,  ஊழியர்களுக்கு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து இருந்து 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.