குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்?  ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்.! 

குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்?  ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்.! 

ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? என்பது தொடர்பாக விவரங்களை தரும்படி கேட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார். அதைத் தொடர்ந்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பான புகார் மனுவை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடிகை குஷ்பு கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அதோடு, நடிகை குஷ்பு பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தையே மீண்டும் அவருக்கே கொடுக்கவும், அவருடைய ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? என்பது தொடர்பாக விவரங்களை தரும்படி கேட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.