அதிவேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து: போட்டோஸ் வைரல்

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து: போட்டோஸ் வைரல்

சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது துறை வயது என்ற நண்பரை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்க்காக போரூர் நோக்கி சென்றுள்ளார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது அப்பொழுது காரின் கட்டுப்பாடு இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினர்.

விபத்து நடந்த காரின் பின்புறம் வழியாக காரில் பயணித்த இரண்டு நபர்களும் வெளியேறியுள்ளனர். இதில் துறை என்பவருக்கு மட்டும் தலையில் சிறிது காயம் ஏற்பட்டு அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காரை அங்கு இருந்து அப்புறம் படுத்தினர். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு  என்பதால் சாலையில் குறைந்த அளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால் மிக பெரிய விபத்து தவிர்க்கபட்டது.