தருமபுர ஆதீனத்திற்க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு!

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை.

தருமபுர ஆதீனத்திற்க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு!

ஆதீனத்தின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

பொதுநல மனு

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு. ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் கலாசாரங்களை பறைசாற்றும் மடங்களில்  இதுவும் ஒன்று. இந்த மடத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலங்களும் கோவில்களும் உள்ளன. கோவில்களை தருமபுர ஆதீன மடம் பராமரித்து வருகிறது.

நிலங்கள் ஆக்கிரமிப்பு

தற்போது விலை உயர்ந்த பல்வேறு நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள உலக புகழ் பெற்ற உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. இந்த கோவிலுக்கு அருகே சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் குறித்து கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆதீனத்திற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை. இதுகுறித்து பல தடவை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பல கோடி மதிப்புள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற விசாரணை

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கார்த்திக் ஆஜராகி தருமபுர ஆதீன மடத்திற்குச் சொந்தமான இடங்கள் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை நீதிபதிகள் முன் தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது யார் யார் என்ற பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் இது குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறி வழக்கை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளார்.