“முத்துவும் முப்பது திருடர்களும்”- காவல்துறையின் புதிய விழிப்புணர்வு முயற்சி...

சைபர் குற்றங்களில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, “முத்துவும் முப்பது திருடர்களும்” என்ற புத்தகத்தை காவல்துறை வெளியிட்டது.

“முத்துவும் முப்பது திருடர்களும்”- காவல்துறையின் புதிய விழிப்புணர்வு முயற்சி...

சென்னை : தமிழகத்தில் சிம் கார்டு துண்டிக்கப்படும் எனக் கூறியும், ஏ.டி.எம் கார்டு செயலிழந்துவிடும் எனக்கூறியும், பல்வேறு லோன் ஆப் செயலிகள் மூலமும் சைபர் மோசடி கும்பல்களால் தொடர் மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சைபர் குற்றங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களிடையே கொண்டு சென்று பண மோசடியில் அவர்கள் சிக்காமல் தவிர்க்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவககத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற சைபர் குற்ற மோசடிகள் தொடர்பான புத்தகத்தினை இன்று வெளியிட்டார். 

மேலும் படிக்க | விழிப்புணர்வு ஏற்படுத்த ஒற்றை கையில் வாள் வீசி சாதனை படைத்த சிறுவன்...!

சென்னை காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள “முத்துவும் முப்பது திருடர்களும்” என்ற பெயர்கொண்ட இப்புத்தகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் கையாளும் முப்பது வழிமுறைகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடைமுறைகள் குறித்தும் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் நடந்த “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்”...

மேலும், எளிய முறையில் புரிந்துகொள்ள ஏதுவாக இப்புத்தகத்தில்  அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களின் சைபர் குற்றங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமையும் எனவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தை சைபர் குற்ற விழிப்புணர்வு மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்புத்தகம் சிறந்த பங்காற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மனுஸ்மிருதிக்கு எதிராக களமிறங்கிய திருமா...அனல்பறக்கும் அரசியல் களம்..!

இப்புத்தகத்தில் URL இணைப்பு மூலமாக மோசடி, மின் கட்டண மோசடி, பான், ஆதார், கே. ஒய்.சி புதுப்பித்தல், கடன் செயலிகள் மூலம் மோசடி, அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி, சிம் கார்டு துண்டிப்பு மோசடி, அமேசான், பிளிப்கார்ட் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி, வீடியோ கால் அழைப்பு மூலம் பணப்பறிப்பு மோசடி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு மோசடி, வெளிநாட்டிற்கு ஆயில் மற்றும் கொட்டைகள் ஏற்றுமதி மோசடி உள்ளிட்ட 30 சைபர் குற்றங்கள் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்த பாடல்கள்...!

இந்நிகழ்ச்சியில் கூரியர் நிறுவன அதிகாரிபோல் பேசி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 8.12 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜம்தாரா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 சைபர் குற்ற வழக்குகளில் மொத்தம் 11 குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 60 பேரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் படிக்க | டிஸ்லெக்சியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..! தொடங்கி வைத்த டி.ஜி.பி...!

அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடப்பாண்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1320 புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வந்துள்ளதாகவும், அதில் 119 புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,  வழக்குகள் தொடர்பாக 28 வட மாநில நபர்கள் உட்பட மொத்தம் 47 சைபர் குற்றவாளிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | நடுரோட்டில் இன்ஸ்டா ரீலுக்கு ஆடி உயிரை விட துணிந்த இளைஞர்கள்...