புதிய கட்டணம் இன்று முதல் அமல் - தமிழ்நாடு அரசு!

புதிய கட்டணம் இன்று முதல் அமல் - தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் கருத்துகள் தொிவித்து வந்தன.

இந்த கருத்துகளை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும், இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசா என நிர்ணயித்தும் உள்ளன. இந்தக் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.