குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சியமா? விவசாயிகள் கவலை!

குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சியமா? விவசாயிகள் கவலை!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தபோது அதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக வாட்ஸ்ஆப்பில் மூழ்கி செல்போனை பார்த்துகொண்டு இருந்தது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய குறைகளை ஆட்சியரிடம் முறையிட்டனர்.

அப்போது அதனை குறிப்பெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக செல்போன் பார்த்துகொண்டு இருந்தனர். வேளாண் அதிகாரிகள் சிலர் வாட்ஸ் ஆப்பில் மூழ்கியபடியும், செல்போன் பேசியவாரும் கூட்டத்தில் பங்கேற்ற சம்பவம் குறைகளை தெரிவித்த விவசாயிகள் மத்தியில் கவலையையும, சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.