அதிமுக ஆட்சியில் நடந்தது தற்போது திமுகவிலும் தொடர்கிறது...

எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட அகழ்வாய்வு பணிகளை இந்த ஆட்சியில் தொடர்ந்து செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி  

அதிமுக ஆட்சியில் நடந்தது தற்போது திமுகவிலும் தொடர்கிறது...

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திரையரங்கில் 382 வது சென்னை தினத்தை முன்னிட்டு நம்ம சென்னை யங் சென்னை என்ற பாடல் வெளியீட்டு விழாவும், சென்னையில் பல்வேறு தொண்டுகளை செய்து வரும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தற்போது நடைபெற்று வரும் 14 அகழ்வாய்வுகள் அனைத்தையும் எங்கள் ஆட்சியில் தொடங்கினோம்.அந்த பணிகள் எதையும் நிறுத்தாமல் அனைத்து அகழ்வாய்வு பணிகளும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொல்லியல் அகழ்வாய்வு க்கு 5 கோடி ரூபாயை 50 கோடியாக உயர்த்தி தரவேண்டும் என்று கூறினார்.  மேலும்எங்களது ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் கொண்டுவந்த சொற்குவை போன்ற திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிதி அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறைக்கு நிதி நிலை அறிக்கையில் தனியாக நிதி ஒதுக்குவது போல பண்பாட்டு துறைக்கும் நிதி ஒதுக்குவது குறித்து நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்தோம் அதனை இந்த அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் மத்திய அரசிடமிருந்து தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்கு கூடுதல் நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். என்று தெரிவித்தார்