உயர் மின் அழுத்த கோபுரத்தை அகற்றக்கோரி ஆற்றின் நடுவே படகில் ஆர்ப்பாட்டம்!

உயர் மின் அழுத்த கோபுரத்தை அகற்றக்கோரி ஆற்றின் நடுவே படகில் ஆர்ப்பாட்டம்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் உயர்மின் அழுத்த கோபுரத்தை அகற்றக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

படகில் திரண்ட மீனவர்கள்

மீனவர்கள் படகில் சென்று ஆற்றின் நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து புதிதாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக காட்டுக்குப்பம் பகுதியில் கடலும் ஆறும் கலக்கும் முகத்துவார பகுதியில் புதிதாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன இந்த

உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் மீனவர்களுக்கு மீன்பிடி தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் 50 படகுகளில் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உயர் மின் கோபுரம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சியினரும்‌ மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் பைபர் படகுகளில்  மீனவர்களுடன் வந்து கோபுரம் கட்டப்படும் ஆற்றுப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.