எங்கள் குடும்பத்துக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது: எனக்கு 40 கோடி ரூபாய் கடன் இருக்கு!!! புலம்பும் கே.சி.வீரமணி...

எனக்கு 40 கோடி கடன் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

எங்கள் குடும்பத்துக்கு ஒரு பாரம்பரியம்  உள்ளது:  எனக்கு 40 கோடி ரூபாய் கடன் இருக்கு!!! புலம்பும் கே.சி.வீரமணி...

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள், சொத்துக்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

 இந்த நிலையில் இன்று திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய, கே சி வீரமணி,  லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையின்போது எனது வீட்டில் 300 சவரன் நகை, 5 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. எனது வீட்டில் கட்டிடம் கட்டுவதற்காக மணல் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசிடம் நான் பணம் கட்டி வாங்கிய சலான் என்னிடம் உள்ளது.

 என்னிடம் சொகுசு கார் உள்ளதாக செய்திகள் வெளியாகின. என்னிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது. அதன் மதிப்பு வெறும் ஐந்து லட்சம் ரூபாய் தான். அந்த கார் வாங்கி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிறது. எனக்கு 40 கோடி கடன் உள்ளது.நான் பல ஆண்டுகளாக முறையாக அரசுக்கு வரி கட்டி வருகிறேன். நான் சிறுவயதில் இருக்கும் போதே கார் வாங்கி வாங்கி வருவது என்னுடைய பழக்கம். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை எனக்கு பென்ஸ் கார் வாங்கித் தந்தார்.

நான் எதையும் மறைக்கவில்லை. ஆடம்பரத்தை விரும்பாத நான். என்னுடைய வேட்புமனுவில் கூட அனைத்தையும் விவரமாக குறிப்பிட்டுள்ளேன், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். இவை அனைத்தும் முற்றிலும் தவறானது என்று முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.