மாநிலத்திலேயே முதல் முறையாக, நியாய விலை கடையில் பெண்களுக்காக....!!

மாநிலத்திலேயே முதல் முறையாக, நியாய விலை கடையில் பெண்களுக்காக....!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நியாயவிலை கடையில் மாநிலத்திலேயே முதல் முறையாக பெண்களுக்கு சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று துவக்கி வைத்துள்ளார்.

ஆட்சியர் பிரபு சங்கர் இது குறித்து பேசியபோது, கரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சுகாதார சானிட்டரி நாப்கின் தயாரிக்கப்பட்டு தோழி என்ற திட்டப் பெயரின் கீழ் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை முதற்கட்டமாக, மகாதானப்புரத்தில் உள்ள நியாய விலை கடையில் இன்று துவக்கப்பட்டுள்ளது. 

ஆறு நாப்க்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூபாய் 30 விலையில், நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவதை விட 25 சதவீதம் விலை குறைவாக உள்ளதாகவும், தமிழக அரசின் முன்னோடி திட்டமான இது வரும் நாட்களில், கரூர் மாவட்டத்தில் 21 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகும், தெரிவித்தார்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமான முறையில் இருப்பதற்காக, இந்த சுகாதார சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், 21 கடைகளில் இந்த நாப்கினை வாங்கி உபயோகப்படுத்தும் பெண்கள் கூறும் கருத்துக்களை கேட்டு அதற்கேற்றவாறு இந்த பொருளின் தரமும் மேம்படுத்தப்படும் என்றும், கூறியுள்ளார்.

மேலும், ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்களும் கூட நியாய விலை கடைகளில், இந்த சுகாதார சானிட்டரி நாப்கினை வாங்கிச் செல்லலாம் எனவும், பொது நியாயவிலை கடைகளை விற்கப்படும் போது கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் இங்கு வாங்கி பயன்பெறலாம் என்ற அடிப்படையில் பொது விநியோக கடைகளில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிக்க || கட்டுக்கட்டாக வலையில் சிக்கிய 2000ரூ நோட்டுகள்.. உத்துப் பார்த்தால் அதிர்ச்சி!!