"நான் முதல்வரானால், மீனவர்களிடம் கையெறி குண்டு கொடுத்தனுப்புவேன்" சீமான் ஆவேசப் பேச்சு!

"நான் முதல்வரானால், மீனவர்களிடம் கையெறி குண்டு கொடுத்தனுப்புவேன்" சீமான் ஆவேசப் பேச்சு!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 'எங்கள் மண் எங்கள் உரிமை' பொது கூட்டத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி அடைவதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்ட வாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் நடை பெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் 'எங்கள் மண் எங்கள் உரிமை' பொது கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  "கள்ளச்சாராயம் குடித்து செத்தா 10 லட்சம் தரும் நம் அரசு, சிங்களன் சுட்டு செத்த 1 ரூ தருவதில்லை. இந்து மதத்தில் உள்ள இளையராஜா பெரும்பான்மை என்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றுள்ள அவரது மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா? நான் முதல்வரானால், உங்கள் படகில் உணவு, பெட்ரோல் கொண்டு போகிறீர்களா என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் நான் கொடுத்து விடும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் கை எறிகுண்டை கொண்டு செல்ல வேண்டும். நடுக்கடலில் உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துங்கள்", என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் நிற்கப்போவதாக தகவல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி வந்து நின்றாளல் நிற்கட்டும், போட்டிப் போடுவோம், என சவால் விடுத்துள்ளார், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதையும் படிக்க: 10 வருடங்களாக அகோரி வாழ்கை... கைதான பிரபல ரவுடி, பரபரப்பு வாக்குமூலம்!