திமுக எம்பிக்கு தொடர்பான இடங்களில், 3வது நாளாக தொடரும் சோதனை!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை 3-வது நாளாக நீடித்து வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அடையாற்றில் நடைபெற்ற சோதனையின்போது மூட்டை மூட்டையாக பணம் சிக்கி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, பணம் எண்ணும் எந்திரங்களுடன் வருமான அதிகரிகள் அங்கு விரைந்தனர். 

இதனையடுத்து, அதிக அளவிலான பணம் மற்றம் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இதேபோல், சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா கல்லூரி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், விடிய விடிய 3 வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.