தமிழ்நாட்டு மீனவர்கள் சிறையிலடைப்பு…இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டு மீனவர்கள் சிறையிலடைப்பு…இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6 வரை திரிகோணமலை சிறையில் அடைத்து, நீதிமன்ற காவல் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ் உட்பட  9 பேரை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களை கைது செய்வது என்பதை தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.  இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் வரும் செப்டம்பர் 6 ஆம் நாள் வரை திரிகோணமலை சிறையில் அடைத்து நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.