தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் விடுதலை!

தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநதிபாலன், 11 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகளையும் அரசுடமையாக்கி தீர்ப்பளித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட மீனவர்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலும் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.