80 வயதை கடந்தும் ஒரே கட்சி, ஒரே கொடி...பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர்!

80 வயதை கடந்தும் ஒரே கட்சி, ஒரே கொடி...பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர்!

ஒரே கட்சி, ஒரே கொடி என 80 வயதை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பயணித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா:

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 பாகங்கள் கொண்ட நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் முதல் பாகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், 2-ஆம் பாகத்தை வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர். 

இதையும் படிக்க: வாரிசு-க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? குறித்த தேதியில் வெளியாகுமா?

முதலமைச்சர் பெருமிதம்:

அப்போது பேசிய முதலமைச்சர், கலைஞரின் தொண்டனாக, தோழனாக, உடன் பிறப்பாக ஒன்று கலந்தவர் டி.ஆர். பாலு என நெகிழ்ச்சி தெரிவித்தார். 17 வயதில் தொடங்கிய அவர், 80 வயதை கடந்தும் ஒரே கொடி, ஒரே கட்சி என்று பயணிப்பவர் டி.ஆர்.பாலு என்ற முதலமைச்சர், 1970 முதல் அவரோடு பழகி வருவாதாக கூறினார். மேலும், மிசா காலச்சிறை அனுபவம், அவரின் உழைப்பு என அவருடனான பயணத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

எனது பாதை என்றும் மாறாது:

பின்னர் பேசிய, திமுக பொருளாளரும், நூலாசிரியருமான டி.ஆர்.பாலு, தனது பாதை என்றும் மாறாது என உறுதிபடத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.