வேலூர் இப்ராஹிமுக்கு பாஜகவில் முக்கிய பதவி.! சமுதாய நல்லிணக்கம் பற்றி பேசுபவர் என அண்ணாமலை புகழாரம்.! 

வேலூர் இப்ராஹிமுக்கு பாஜகவில் முக்கிய பதவி.! சமுதாய நல்லிணக்கம் பற்றி பேசுபவர் என அண்ணாமலை புகழாரம்.! 

தீவிர பாஜக ஆதரவாளரும், 'தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்' என்ற அமைப்பின் தலைவருமான வேலூர் இப்ராஹிம் பாஜகவின் தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


இஸ்லாமியர் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருபவர்   வேலூர் இப்ராஹிம். இவர் மத கலவரத்தை உருவாக்க முயல்கிறார் என்று சொல்லி பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பாஜகவையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இவருக்கு பாஜகவின் தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் எனக்கு இந்த பதவி கொடுத்த மாநில தலைவர் முருகனுக்கும், பாஜக தலைவர் நட்டாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.  

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக துணைதலைவர் அண்ணாமலை "அனைத்து சமுதாய நல்லிணக்கம் பற்றி பேசி வரும் வேலூர் இப்ராஹிம்  அவர்கள் பாஜகவின் அகில இந்திய மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா மதத்தினரின் சகோதரத்துவம் ஒங்க அவர் செயல்பாடு இருக்கும், நிச்சயம் அவர் செய்து காட்டுவார்" எனக் கூறியுள்ளார்.