மதுவுக்காக கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர குடிகாரன்.! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்.!
பண்ருட்டி அடுத்த நல்லான் தெரு எல்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதே நிரம்பிய இளம்பெண் பாரதி.இவருக்கும் அண்டிகுப்பத்தை சேர்ந்த ஜெயமணி இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதி புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருந்த சம்பவங்கள் காவல்துறையினையிரையே திடுக்கிட வைத்துள்ளது.
மது போதைக்கு அடிமையான ஜெயமணி பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து குடிக்கும் இவருடைய சக குடிகார நண்பர்கள் தினமும் இவருக்கு ஓசியில் மது வாங்கி கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் குடிக்காக எதுவும் செய்ய முடிவெடுத்த ஜெயமணி, கட்டிய மனைவியையும் சீரழிக்க முன்வந்து உள்ளார்.
தனது குடிகார நண்பன் மணிகண்டன் கேட்டார் என்பதற்காக, மணிகண்டனை வீட்டிற்கே அழைத்து வந்து தனது மனைவியை மணிகண்டனின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார் ஜெயமணி. இந்த சம்பவத்தின் போது பாரதி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின் சத்து மாத்திரை என்ற பெயரில் மயக்க மாத்திரை கொடுத்து அவனுடைய மற்றொரு நண்பனான சுந்தரமூர்த்தி என்பவனுக்கு தனது மனைவியை விருந்தாக்கியுள்ளார் ஜெயமணி. இந்த சம்பவம் பற்றி அறிந்து தனது கணவரிடம் இது குறித்து சண்டை போட்டபோது, இதை வெளியே சொன்னால் குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் ஜெயமணி.
இதனால் ஆவேசமடைந்த பாரதி, இனியும் பொறுப்பதில் அர்த்தம் இல்லை என்று, அங்கிருந்து குழந்தையுடன் தப்பித்து வந்த பாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அயோக்கியர்களான ஜெயமணி, மணிகண்டன், சுந்தரமூர்த்தி ஆகியோரை பிடித்து சிறையில் அடைத்தனர்.