தஞ்சை பெரியகோவிலில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா...!

தஞ்சை பெரியகோவிலில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா...!

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற மே 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது..

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

முன்னதாக பெரியகோவில் வளாகத்தில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது. 

இதையும் படிக்க | செல்போனை வெளியே எடுத்தால் ரூ.5000 அபராதம்...! காளகஸ்தி கோயில் நிர்வாகம் அதிரடி...!!

18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் காலை - மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே - 1ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதையும் படிக்க | விவேக் 2 ஆண்டு நினைவுநாள்...!! மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி..!