அதிகரிக்கும் கொரோனா... அறிவுரை வழங்கிய மாநகராட்சி!!

அதிகரிக்கும் கொரோனா... அறிவுரை வழங்கிய மாநகராட்சி!!

மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமை படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று:

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவையான அளவில் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.

முக கவசம்:

அந்தவகையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள், சந்தைகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்கள் தாமாக முக கவசம்  அணிந்து தொற்று பரவாமல் தற்காத்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையிலும் கணிசமான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் கொடுத்துள்ள வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அறிவுரை:

பொது இடங்களில் கூடும் போது பொதுமக்கள் முக கவசம் அணித்துக்கொள்ள வேண்டும் எனவும் தொற்று பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதற்கான அறிகுறி இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் வீட்டில் இருந்து சிகிச்சை எடுப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கூறியுள்ளது.

மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தொற்று பாதிக்கப்படுபவர் இல்லத்தின் வாயிலில் தொற்று பாதிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் ஓட்ட வேண்டும் எனவும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து வெளியே செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  எம்.பி.பி.எஸ் இடஒதுக்கீடு... நீரழிவு நோய்க்காக இடஒதுக்கீடு கோரிய மாணவி..!!