இனி அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி...முதலமைச்சர்!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி...முதலமைச்சர்!!

ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என தொிவித்துள்ளார்.  மேலும் ‘நான் முதல்வன்’ திட்டம் தனது கனவுத் திட்டம் எனக் கூறிய அவர், நான் முதல்வன் என மாணவர்களை சொல்ல வைப்பதே இதன் நோக்கம் என அதற்கான விளக்கமளித்தார்.

தொடா்ந்து பேசிய அவா் தமிழ்நாட்டில் கல்வி புரட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அப்புரட்சியில் சிறப்பான வெற்றிப் பெறும் என பெருமிதம் பொங்க பேசியுள்ளார்.

இதையும் படிக்க:  மது அருந்த சிறப்பு உரிமம்.... திருத்தப்பட்ட அரசாணை!!