இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு காப்போம்... மு.க.ஸ்டாலின்...!!

இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு காப்போம்... மு.க.ஸ்டாலின்...!!

திராவிட மாடல் அரசு என்றென்றும் இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு பரிந்து காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற  நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

அதன் பின் உரையாற்றிய முதலமைச்சர், ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் என்றைக்கும் துணை நிற்கக்கூடிய இயக்கமாக திமுக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியிலிட்டு பேசினார். அதில் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கக்கூடிய அனைவரும் பயணம் மேற்கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கியுள்ளதாகவும், இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, “உருது அகாடமி” தொடங்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்வதாகவும், என்றென்றும் வாழ்வில், இன்பமும், அன்பும், கருணையும், வளமும் பொங்கிச் செழிக்கட்டும் எனவும் கூறினார்.