மின்சாரம் இல்லாமல் தூங்குமா உதயநிதி குடும்பம்? பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஆவேச ட்வீட்..!

கரண்ட் இல்லாமல் உதயநிதி குடும்பம் தூங்குமா?

மின்சாரம் இல்லாமல் தூங்குமா உதயநிதி குடும்பம்? பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஆவேச ட்வீட்..!
திமுக ஆட்சிக்கு பிறகு தற்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கே முன்னறிவிப்பு இன்றி அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அணிகல்கள் மின்சார கம்பிகளின் மேல் ஓடுவதால், இரண்டு கம்பிகள் இணைந்து ஷாட் செர்க்யூட் ஆவதன் மூலமும் மின் தடை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். இதனால் மக்களின் பார்வை அணில்களின் பக்கம் திரும்பியது. 
 
அவர் கூறியது ஒரு வகையில் உண்மை தான் என்றாலும் கூட நெட்டிசன்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கிண்டல் கேலி செய்து வந்தனர். அதற்கும் ஆதாரப் பூர்வமாக பதிவுகளை தெரிவித்து வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மேலும் கடந்த ஆட்சியில் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாததாலும் மின்வெட்டு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், வாரத்தில் 3 நாட்கள் பல மணி நேரம் மின்வெட்டு என்பதெல்லாம் நிச்சயம் பராமரிப்பு பணி என்று சொல்லிச் சமாளிக்க முடியாது எனவும், அணில்கள் ஓடுது என்று காரணம் சொல்லவும் முடியாது எனவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
நிச்சயம் பெரிய ஊழல் வேலை டெண்டர் விடுவதிலும் இல்லை, மின்சாரம் வாங்குவதில் தில்லு முல்லு நடப்பதால் மட்டுமே இது சாத்யம் எனக் கூறியுள்ளார். மக்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது எனவும், மின்வெட்டு ஏற்பட்டால் மக்கள் பொறுமை இல்லாமல் போன் செய்வதாக திமுக அமைச்சர் கூறிய கருத்திற்கு பொங்கிய மாரிதாஸ், இரவு 11 மணிக்கு உதயநிதி குடும்பம் மின்சாரம் இல்லாமல் தூங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் மின் தடையைச் சரி செய்ய வக்கு இல்லை, மக்கள் சகிப்புத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர் என சீறிப் பாய்ந்துள்ளார் மாரிதாஸ்.

ரமணா விஜயகாந்த் பாணியில் புள்ளி விவரமாக பேசுவேன் என பேசி மொக்கை வாங்குவதில் மாரிதாசை மிஞ்ச ஆளை இல்லை என்றால் அது மிகையாகாது. குண்டாஸ் சட்டத்தில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கிஷோர் கே சாமி நம்பர் 2 டுபாகூர் என்றால்,  புள்ளி விவரப் புலி மாரிதாஸ் நம்பர் ஒன் டுபாகூர்.