லுங்கியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 128 கிராம் தங்கம் பறிமுதல்...

லுங்கியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 128 கிராம் தங்கம் பறிமுதல்...

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும்  துபாய் மலேசியா ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில்  விமானத்தில் பயணம் செய்யும் ஒரு சில பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதும், அதனை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து கண்டுபிடிப்பதும் வழக்கமாக உள்ளது

இதேபோன்று தற்போது லுங்கியில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தால் ஆண் பயணி ஒருவரை  வான் நுண்ணறிவு பெறுவது அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த பயணியின் "லுங்கி"யில்மறைத்து வைத்து எடுத்து வந்த 128 கிராம் எடையுள்ள ரூ.6.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | இளைஞரை மிரட்டி செயின் பறித்த சம்பவம்...! சிசிடிவியில் சிக்கிய இருவர்...!