எம்எல்ஏ-வின் உதவியாளரை தாக்கிய 2 பேர் கைது...!

சென்னை திருவொற்றியூரில் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் தமிழ் இன்பன் என்பவர், கேவிகே குப்பம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது மதுபோதையில் அவ்வழியாக வந்த தீனதயாளன் மற்றும் சசிகுமார் ஆகியோர், தமிழ் இன்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, தமிழ் இன்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,  தீனதயாளன் மற்றும் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.