போலி துப்பாக்கியை  காட்டி வழிப்பறி... வியாசார்பாடியில் 2 பேர் கைது...

பெரம்பூர் பகுதியில் போலி துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி துப்பாக்கியை  காட்டி வழிப்பறி... வியாசார்பாடியில் 2 பேர் கைது...

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனி பகுதியை சேர்ந்தவர் வடமலை 32 இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வழியாகச் செல்லும் போது அவ்வழியாக வந்த 2 பேர் துப்பாக்கியைக் காண்பித்து வடமலை இடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். மேலும் அவ்வழியாக வந்த சிலரை துப்பாக்கி காட்டி அச்சுறுத்தி வந்தனர். 

இதுகுறித்து உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு சென்ற எம்கேபி நகர்  போலீசார் அப்பகுதியில் தீ விர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து வியாசர்பாடி குட்செட் பகுதியில் இருந்த இருவரையும் கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி பி. வி.காலனி பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் வயது 27. மற்றும் ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 27 என்பது தெரியவந்தது இவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த ஹேர் பிஸ்டல் எனப்படும் போலி துப்பாக்கியை வைத்து வியாசர்பாடி பகுதியில் வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 1000 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர் கைது. செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.