பெட்ரோல் பங்க், பால் கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது - செல்போன், இருசக்கர வாகனம், பணம் பறிமுதல்

பெட்ரோல் பங்க், பால் கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது - செல்போன், இருசக்கர வாகனம், பணம் பறிமுதல்

சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடையில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் தாமோதரன் என்பவர் நடத்தி வரும் பெட்ரோல் பங்கில் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போனும், ஜெயபிரகாஷ் என்பரின் பால் கடையில் மூன்றாயிரம் ரூபாயும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பீர்க்கங்கரணை குற்றப்பிரிவு போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர் ஒருவர் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள உணவகத்தில் அவர் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதன், கௌதம் குமார் மற்றும் சிறுவன் ஒருவனை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.