பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு...

கோவை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (60) இவர் தனது மருமகள் ஜமுனாவின் அம்மா வீட்டின் கிரகப்பிரவேசத்திற்காக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வச்சினம்பாளையம் பகுதிக்கு நேற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணி அளவில் பாக்கியம் அவருடைய அண்ணன் பாலகிருஷ்ணன் மருமகள் ஜமுனா மோனிகா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சகுந்தலா ஆகியோர் வச்சினம்ப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | கிணற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்...

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரை மீட்டனர்.

பாக்கியம், ஜமுனா மற்றும் சகுந்தலா ஆகியோர் நீரல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் சகுந்தலாவின் உடலை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர் இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட காணாமல் போன மாணவி...