மின்வாரிய ஊழியர் வீட்டில் 30 சவரன் தங்க நகை திருட்டு.. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

வேலூரில் மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்கநகைகள் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர் வீட்டில் 30 சவரன் தங்க நகை திருட்டு.. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் கிருஷ்ணகிரி மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோக்களை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அதனை பயன்படுத்தி புதூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரின் குழந்தையின் கையில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதனிடையே  புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கப்பன் என்பவர் நகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில்  அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி  6 சவரன் உருக்கிய கட்டி தங்கம் மற்றும்  இரண்டரை லட்சம்  ரொக்க பணத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.. இதுப்பற்றி வழக்குப்பதிந்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.